மேலும்

சிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் பேச்சு

இந்திய கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டு பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

நேற்று கொழும்பில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்ற இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் ராஜேந்திர சிங், சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவையும், சிறிலங்கா கடலோர பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் றியர் அட்மிரல் சமந்த விமலதுங்கவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அத்துடன் சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணதுங்கவையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்புகளின் போது இருதரப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாக விரிவான பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *