மேலும்

கோத்தாவைக் கைது செய்ய மீண்டும் முயற்சி

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு மீண்டும் புதிய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூட்டு எதிரணி சந்தேகம் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய கூட்டு எதிரணியின் உறுப்பினர் உதய கம்மன்பில, கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளார் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகிய போதும், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *