மேலும்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி

அனைத்துலக ஊடக சுதந்திர நாளான நேற்று, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். நகரில் உள்ள, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவிடத்தில் நேற்று நடந்த நிகழ்வில், நினைவுச் சின்னத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். மாநகர முதல்வர் மற்றும் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *