மேலும்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

jaffna-flood (1)அடுத்து வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், தொடர்ந்து மழை பெய்வதற்கு சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா, தென், மத்திய மாகாணங்களில், கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. தென், ஊவா, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும், பொலன்னறுவ, மாத்தளை மாவட்டங்களிலும் 100 மி.மீ இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம்.

வடக்கு மாகாணத்தில் 50 தொடக்கம் 60 கி.மீ வேகத்தில் கடும் காற்று வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *