நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் பணிக்காலம் நீடிப்பு
நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் பணிக்காலம், ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் தொடர்பான பணிகளை முன்னெடுப்பதற்காக, மனோ தித்தவெலவைத் தலைவராகக் கொண்ட இந்தச் செயலகம், 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் செயற்படும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தச் செயலகத்தின் பணிக்காலம் முடிவுக்கு வருகிறது.
இந்த நிலையில், இந்தச் செயலகத்தின் பணிக்காலத்தை, 2019 மார்ச் 31ஆம் நாள் வரை நீடிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இதுதொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.