மேலும்

முன்னாள் புலனாய்வுத் தலைவரிடம் இன்றும் விசாரணை

Kapila Gamini Hendawitharanaசிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவுத் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் இன்றும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்காக முன்னிலையானார்.

கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமையும், மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது, மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 3.2 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டது, மற்றும் அதனை அவர் எவ்வாறு செலவிட்டார் என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்றும் அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *