அவசரமாக இன்று நாடு திரும்புகிறார் ரணில்
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த ஏற்படுத்திய அனர்த்தத்தை அடுத்து, தனது வெளிநாட்டுப் பயணத்தை சுருக்கிக் கொண்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்பவுள்ளார்.
ஜப்பானுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்றுமுன்தினம் நண்பகல் வியட்னாம் சென்றிருந்தார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
நான்கு நாட்கள் வியட்னாமில் பயணம் மேற்கொள்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். நாளை மறுநாள் ஏப்ரல் 20ஆம் நாள் கொழும்பு திரும்பும் வகையில் அவரது பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
எனினும், மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தினால், 30இற்கு அதிகமான பொதுமக்கள் பலியானதை அடுத்து, தனது வெளிநாட்டுப் பயணத்தை சுருக்கிக் கொண்டு சிறிலங்கா பிரதமர் இன்று நாடு திரும்பவுள்ளார்.