ஜெனிவா தீர்மானம் குறித்த நாடாளுமன்ற விவாதம் அரை நாளாக குறைப்பு
ஜெனிவா தீர்மானம் தொடர்பாக நாளை நடைபெறவிருந்த முழுநாள் நாடாளுமன்ற விவாதம், அரை நாளாக குறைக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து நாளை முழு நாள் விவாதம் நடத்துவதற்கு எதிர்க்கட்சியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கியிருந்தது.
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மறைந்த அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் வண. தவுல்தென ஞானிசார தேரரின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, நாளை நாடாளுமன்ற அமர்வு மாலை 3 மணியுடன் நிறுத்தப்படவுள்ளது.
இதனால் நாளை நடத்தப்படவிருந்த ஜெனிவா தீர்மானம் குறித்த முழு நாள் விவாதம் அரைநாள் விவாதமாகவே இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.