ஓய்வுபெற்ற பின்னர் பேருந்தில் வீட்டுக்குச் சென்ற மாத்தளை மாவட்டச் செயலர்
மாத்தளை மாவட்டச் செயலர் குமாரசிறி பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், தனது அதிகாரபூர்வ வாகனத்தை அதிகாரிகளிடம் கையளித்து விட்டு, பேருந்தில் ஏறி வீட்டுக்குச் சென்ற சம்பவம் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
33 ஆண்டுகள் அரச சேவையில் பணியாற்றிய குமாரசிறி நேற்று மாத்தளை மாவட்டச் செயலர் பதவியில் இருந்து ஐந்து மாதங்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றார்.
நேற்று மாவட்டச் செயலகத்துக்கு வந்த அவர், உரிய ஆவணங்கள் மற்றும் வாகனங்களை முறைப்படி அதிகாரிகளிடம் கையளித்து விட்டு அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார்.
அதிகாரபூர்வ வாகனத்தையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்த அவர், பேருந்தில் ஏறி வீட்டுக்குச் சென்றார். இது அரச அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர் மாத்தளை மாவட்டச் செயலராகப் பணியாற்ற முன்னர், அனுராதபுர மற்றும் நுவரெலிய மாவட்டங்களின் செயலராகப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.