நேற்றிரவு கோவா சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்
பிரிக்ஸ் மற்றும் பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முனைப்பு அமைப்பு ஆகியவற்றின் மாநாடுகளில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கோவா சென்றடைந்தார்.
இந்தியாவின் கோவா மாநிலத்தில், இந்த இரண்டு அமைப்புகளினதும் உச்சிமாநாடு நேற்று ஆரம்பமாகி நாளை வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கோவாவின் டபோலிம் விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
அவரை கோவாவில் தரையிறங்கியதும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவில் இருந்து வந்துள்ள நண்பரை வரவேற்பதாக ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த மாநாட்டின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் சிறிலங்கா அதிபர் பேச்சு நடத்தவுள்ளார்.