மேலும்

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல்

samudra-paheredarஇந்திய கடலோரக் காவல்படையின் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான,  சமுத்ர பகீரெடர், கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

இரு நாடுகளின் கடலோரக் காவல் படைகளுக்கும் இடையில், பரஸ்பர புரிந்துணர்வையும், உறவுகளையும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இந்தக் கப்பல் கொழும்பு வந்துள்ளது.

இந்தக் கப்பலில் உள்ள மாலுமிகள், சிறிலங்கா கடலோரக் காவல் படையினருடன் இணைந்து, நிபுணத்துவ, பயிற்சி, மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

samudra-paheredar

100 மாலுமிகளுடன் வந்துள்ள இந்தக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *