மேலும்

சீனாவுக்கு 55 சதுர கி.மீ நிலத்தை வழங்க சிறிலங்கா இணக்கம்

Chinese_flagசிறப்பு பொருளாதாதர வலயத்தை உருவாக்குவதற்கு, சீனாவுக்கு 55 சதுர கி.மீ நிலப்பகுதியை சிறிலங்கா வழங்கவுள்ளதாக பீஜிங்கில் உள்ள சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளதாக, சைனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பாந்தோட்டையில்  சிறப்புப் பொருளாதார வலயத்தை உருவாக்குவற்கு சீனர்கள் 55 சதுர கி.மீ காணிகளை கோரியுள்ளனர். அதற்கான நிலங்களைப் பெற்றுக் கொடுக்கும் செயல்முறைகளை ஆரம்பித்திருப்பதாக, சிறிலங்கா அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளதையும், சிறிலங்கா தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, சிறப்புப் பொருளாதார வலயம் எங்கு அமையவுள்ளது என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, சிறப்புப் பொருளாதார வலயத்தை அமைப்பது தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்காக சீன அதிகாரிகள் குழுவொன்று அடுத்தவாரம் கொழும்பு செல்லவுள்ளதாகவும், சைனா டெய்லி குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *