ஒரே சீனா கொள்கையையே சிறிலங்கா பௌத்தர்கள் ஆதரிக்கின்றனர் – அஸ்கிரிய பீடாதிபதி
சிறிலங்கா பௌத்தர்கள் ஒரே சீனா என்ற கொள்கையையே ஆதரிக்கின்றனர் என்று அஸ்கிரிய பீடாதிபதி வண.வரகாகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம், கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் யி ஷியான்லியாங், அஸ்கிரிய பீடாதிபதியைச் சந்தித்த போதே, ஒரே சீனா என்ற கொள்கையில் உறுதிப்பாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டதாக, சீனத் தூதரக பேச்சாளர் ஷாங் நய்கி கூறினார்.
மதம் என்ற போர்வையில் சீனாவைப் பிளவுபடுத்த எந்த சக்திகளையும் மகாசங்கம் அனுமதிக்காது என்றும் அஸ்கிரிய பீடாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார்.
அதேவேளை, பொருத்தமான தருணம் ஒன்றில், சீனாவுக்குப் பயணம் செய்யுமாறு, அஸ்கிரிய பீடாதிபதிக்கு சீனத் தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார்.