மேலும்

வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் சிலவற்றை மூட சிறிலங்கா அரசு திட்டம்

mangala-samaraweeraவெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் பலவற்றை மூடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ‘முக்கியத்துவம் குறைந்த சில நாடுகளில் உள்ள துதரகங்களை மூடுவதற்கு, வெளிவிவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதேவேளை, செலவினங்களைக் குறைக்கும் நோக்கில், வதிவிடமற்ற தூதுவர்கள் நியமனங்களை அறிமுகப்படுத்தவும் எண்ணியுள்ளது.

முழுமையான தூதரகத்தை அமைப்பதற்கு தேவையற்ற இடங்களில் இத்தகைய வதிவிடமற்ற தூதுவர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *