அமைச்சர் பதவியை உதறினார் ஜனக பண்டார – கவிதை வடிவில் மைத்திரிக்கு கடிதம்
சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த, மாகாணசபைகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று பதவி விலகியுள்ளார்.
அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்ளும் கடிதத்தை இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்காதமையே தனது இந்த முடிவுக்கான காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் இந்தப் பதவி விலகல் கடிதத்தை கவிதை வடிவில் எழுதியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த 14ஆம் நாள் நிகழ்த்திய உரை, குறித்து ஜனக பண்டார தென்னக்கோன் பெரும் அதிருப்தி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.