மேலும்

மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பு கோத்தாவிடம் ஒப்படைப்பு

mahinda_gotaஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட தேர்தல் பரப்புரைகளுக்குப் பொறுப்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

இந்தநிலையிலேயே அவரது சகோதரரான கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைத் தலைவராக மகிந்த ராஜபக்ச கடந்தவாரம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *