மேலும்

மைத்திரி அரசில் உள்ள சுதந்திரக் கட்சியினரை பதவி விலகுமாறு மகிந்த தரப்பு அழுத்தம்

SLFPமைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை பதவி விலகும் படி, மகிந்த ராஜபக்ச தரப்பினரால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களை அடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 3 பிரதி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.

எனினும், இன்னமும் 25 வரையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள், அமைச்சர், பிரதி அமைச்சர், இராஜாங்க அமைச்சர்களாகப் பதவியில் இருக்கின்றனர்.

இவர்கள் பதவியில் இருந்து விலகாமல் இருப்பது மகிந்த ராஜபக்ச தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதனால், இவர்களை பதவியில் இருந்து விலகுமாறு மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான சுதந்திரக் கட்சித் தலைவர்கள் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளும் போது. அதே அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் அங்கம் வகிப்பது பரப்புரையைப் பலவீனப்படுத்தும் என்று கூறியே இவர்களை பதவி விலகுமாறு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.

எனினும், இது மைத்திரிபால சிறிசேனவை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மேலும் தனிமைப்படுத்துவதற்கான ஒரு திட்டமே என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *