மேலும்

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தயார் – என்கிறார் ரணில்

ranilதமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த ஐக்கிய தேசிய கட்சியின் சிறப்பு சம்மேளனக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒன்றுபட்ட – பிரிக்கப்படாத இலங்கை என்ற கட்டமைப்புக்குள் மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து தமது அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல் முடிந்தவுடன், போர்க்காலத்தில், வடக்கிலும், கிழக்கிலும், இராணுவத் தேவைகளுக்காக கைப்பற்றப்பட்ட தனியார் காணிகள்  அவற்றின் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *