மேலும்

வன்னி, மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி – ஏனைய இடங்களில் ஐதேகவுடன் கூட்டு

rauff-hakeemவரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி, மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளது.

கொழும்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளது.

திருகோணமலை, கண்டி, கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஐதேகவுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சிறிலங்காவில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் பரவலான செல்வாக்கைப் பெற்றுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு பெற்றுள்ள ஐதேகவும் இணைந்து போட்டியிடுவது இருகட்சிகளையும் வலுப்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *