சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுணவர்த்தன இன்று பதவியேற்பு
சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக இன்று பதவியேற்கவுள்ளார் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன. சிறிலங்கா கடற்படைத் தலைமை அதிகாரியாக இருந்த ரவீந்திர விஜேகுணவர்த்தனவை புதிய கடற்படைத் தளபதியாக நியமிப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், இன்று அவர் புதிய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன சிறிலங்காவின் கடலோரக் காவல்படையின் தளபதியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த ஜெயந்த பெரேரா, அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்ட நிலையில் ஓய்வுபெற்றுள்ளார்.