மேலும்

டக்ளஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி வேட்புமனுத் தாக்கல்

EPDP-nomination (1)யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.

டக்ளஸ் தேவானந்தாவை முதன்மை வேட்பாளராக முன்னிறுத்தி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வேட்புமனுவில் ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற,  முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன், புதுமுகமாக ஆசிரியர் இரா.செல்வவடிவேல் இடம்பெற்றுள்ளார்.

EPDP-nomination (2)

ஈபிடிபி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்-

டக்ளஸ் தேவானந்தா

முருகேசு சந்திரகுமார்

சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்)

பசுபதி சீவரத்தினம்

ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் (ரங்கன்)

சூசைமுத்து அலெக்ஸ்சாண்டர் (சாள்ஸ்)

சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்)

இராமநாதன் ஐங்கரன்

யோகேஸ்வரி பற்குணராஜா

சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல்

வழக்கத்தில் பெரியளவில் மேளதாளங்களுடன் பேரணியாகச் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்யும் ஈபிடிபியினர் மிக குறைந்தளவு ஆதரவாளர்களுடன் நடந்து சென்று  இம்முறை வேட்புமனுத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *