மேலும்

ஜனவரி 8 புரட்சி தடம் புரள இடமளியேன் – என்கிறார் மைத்திரி

maithripala-srisenaஜனவரி 8ஆம் நாள் நடந்த அமைதிப் புரட்சி தடம் புரள்வதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாத்தறை – அம்பாந்தோட்டை தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நான் திடீரென்றோ, எதேச்சையாகவோ அரசியலுக்கு வரவில்லை. எனக்கு அரசியலில் 49 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது.

ஜனவரி 8க்கும் பின்னர் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு கட்சியினதும் முடிவுக்கு இடமளிக்கமாட்டேன்.  நான் அதனைப் பாதுகாப்பேன்.

நாட்டில் நீதி உறுதிப்படுத்தப்படும் என்பதுடன், குடும்ப ஆட்சி, ஊழல் என்பன முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, நல்லாட்சி உறுதி செய்யப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *