மேலும்

மகிந்தவை நிறுத்துவதற்கு சுதந்திரக் கட்சி முடிவெடுக்கவில்லை- சந்திரிகா

Chandrika-Kumaratungaதாம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தாலும், அவருக்கு போட்டியிட வாய்ப்பளிப்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தனது 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மினுவாங்கொட மாவட்ட மருத்துவமனையில், நோயாளர்களுக்கு உணவு வழங்கிய பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘அவர் எதையும் கூறலாம். ஆனால் அவருக்கு நியமனம் வழங்குவதற்கு யார் இணக்கம் தெரிவித்தது?

இந்த விடயத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வித்தியாசமான கருத்தைக் கொண்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *