மேலும்

நாளை மறுநாள் கொழும்பு வரும் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணமும் செல்வார்

nisha-desai-biswalமூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, அரசாங்க உயர்மட்டப் பிரமுகர்களை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

போருக்குப் பிந்திய நல்லிணக்கம், மற்றும் பெர்றுப்பக் கூறல் தொடர்பாக கொழும்பில், ஆரம்பக் கட்டப் பேச்சுக்களை நடத்திய பின்னர், அவர், வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாணசபையின்  உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்காவுக்கு வரும் அமெரிக்காவின் முதல் உயர்மட்ட பிரதிநிதி இவராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *