மேலும்

அடுத்த நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து

parliamentசிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடுப்பகுதியில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,  புதிய நாடாளுமன்றத்தில் வடக்கில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2014ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், யாழ்.மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இருந்து 9 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

எனினும், 2014ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், யாழ். மாவட்டத்துக்கு 7 நாடாளுமன்ற ஆசனங்களே ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனால், வடக்கு மாகாணத்தில் இருந்து கடந்த நாடாளுமன்றத்துக்கு 15 உறுப்பினர்கள் தெரிவான போதும், இம்முறை 13 உறுப்பினர்களே தெரிவு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் ஆபத்து எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *