மைத்திரியின் இறுதிப் பரப்புரைக் கூட்டத்துக்கு கடும் பாதுகாப்பு
மருதானையில், நேற்றிரவு நடந்த எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டிருந்த இந்தக் கூட்டம், நள்ளிரவு வரை இடம்பெற்றது.
இரவு 11.30 மணியளவில் பரப்புரை கூட்ட மேடைக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, குண்டுதுளைக்காத கண்ணாடிக்குப் பின்பாக நின்றே உரையாற்றினார்.
மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படலாம் என்பதால், சிறப்பு அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் நேற்றைய கூட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.
அவரைச் சுற்றியும், மேடையில் அமர்ந்திருந்த அரசியல் தலைவர்களைச் சுற்றியும், மெய்க்காவலர்களும், காவல்துறை அதிகாரிகளுமே நிறைந்திருந்தனர்.
இதனால், மேடையில் அமர்ந்திருந்தவர்களைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.