மேலும்

8ம் நாளுக்குப் பின்னர் எதிரணியில் இருப்பேன் என்கிறார் அமைச்சர் மேர்வின் சில்வா

Mervyn Silvaசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரையில் இருந்து ஒதுங்கியுள்ள, அமைச்சர் மேர்வின் சில்வா, விரும்பிய யாருக்காவது வாக்களிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கிரிபத்கொடவில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி செயலகத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

“மகிந்த ராஜபக்ச ஒரு உயர்வான மனிதர். அவரது குடும்பத்தினர் எல்லாவற்றையும் அழித்து விட்டனர்.

வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று விரும்பிய யாருக்கேனும் வாக்களியுங்கள். வரும் 8ம் நாளுக்குப் பின்னர், எதிரணியில் நான் அமர்ந்திருப்பேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அடிதடி அமைச்சர் என்று மோசமான பெயர் எடுத்த, மேர்வின் சில்வா, அரசாங்கத்தை விட்டு விலகி, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொள்ள விரும்பியிருந்தார்.

எனினும், எதிரணியில் முக்கிய பங்கு வகிக்கும், ஐதேக மற்றும் ஜாதிக ஹெல உறுமய என்பன, அவரை எதிரணிக்குள் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டன.

நல்லாட்சியை அமைப்பது குறித்து பரப்புரை செய்யும், மைத்திரிபா சிறிசேனவுக்கு, மேர்வின் சில்வாவினால் பாதிப்பு ஏற்படும் என்று அந்தக் கட்சிகள் அவரை நிராகரித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *