மேலும்

ஐதேக தலைமையகத்துக்குள் குடும்பக் காட்டைத் தேடியது சிறிலங்கா காவல்துறை

sri-kotta-policeகொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவுக்குள் நுழைந்து சிறிலங்கா காவல்துறையினர் தேடுதல்களை நடத்தியுள்ளனர்.

கங்கொடவில நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஆணைக்கு அமையவே, இன்று பிற்பகல் இந்த தேடுதல் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை இழிவுபடுத்தும், புத்தகங்கள் இருப்பதாக கூறியே சிறிலங்கா காவல்துறை இந்த தேடுதலை மேற்கொண்டது.

மகிந்த ராஜபக்சவை இழிவுபடுத்தும் வகையில், குடும்பக் காடு என்ற பெயரில் புத்தகங்களை ஐதேக வெளியிட்டுள்ளதாகவும், அவற்றைக் கண்டுபிடிக்கவே தேடுதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாமல் ராஜபக்ச தலைமையிலான நீலப்படையணி நேற்று சிறிகோத்தா முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அங்கு கலகத் தடுப்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இன்று சிறிகோத்தாவுக்குள் தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *