மேலும்

அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் பாரிய கட்சித் தாவல்?

crossoverசிறிலங்கா அதிபர் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கட்சி தாவவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தல் பரப்புரைகள் வரும் 5ம் நாள் நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.

இந்தநிலையில், தேர்தல் பரப்புரைகள் நிறைவடைவதற்கு முன்னதாக, அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும், எதிரணியுடன் இணைந்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இவர்களில் சிலர் வரும் 5ம் நாள் இடம்பெறவுள்ள மைத்திரிபால சிறிசேனவின் இறுதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், எதிரணியுடன் இணைந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கணிசமான அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய பிரமுகர்கள், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தேர்தல் பரப்புரையில், இருந்து ஒதுங்கியுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக, எதிரணியுடன் இணைந்து கொண்டிருந்த, முன்னாள் அமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்க, அடுத்த இரு நாட்களில் மூத்த அமைச்சர் ஒருவர் எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இன்று மத்திய மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினரான சமரநாயக்க எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *