நம்பகமான, அமைதியான தேர்தலை வலியுறுத்துகிறது ஐரோப்பிய ஒன்றியம்
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல், அமைதியாகவும், நம்பகமாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இடம்பெறுவது முக்கியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
“நம்பகமாக தேர்தலுக்கு அமைதியான சூழல் அவசியம் என்ற எமது நீண்டகால நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறது.
அச்சமோ வன்முறைகளோ அற்ற சூழலில், தமது தலைவர்களைத் தெரிவு செய்வதற்கு சிறிலங்கா குடிமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
சிறிலங்காவின் வலுவான ஜனநாயக பாரம்பரியங்களை பின்பற்றுவதில் சகல கட்சிகளுக்கும் பங்குள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.