பந்துல குணவர்த்தன எதிரணிக்கு தாவலாம்? – திடீரென வெளிநாடு சென்றதால் ஆளும்கட்சி அதிர்ச்சி
சிறிலங்காவின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, திடீரென வெளிநாடு ஒன்றுக்கு அவசரமாகப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நாடு திரும்பியதும் அவர் அரசியல் ரீதியிலான முடிவொன்றை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதுதொடர்பாக முக்கிய சந்திப்பு ஒன்றுக்கே பந்துல குணவர்த்தன வெளிநாடு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்கான ஆளும்கட்சிக் குழுவின் முக்கிய உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், வேட்புமனுத் தாக்கல் இடம்பெறவுள்ள தருணத்தில் திடீரென அவர் வெளிநாடு சென்றுள்ளது ஆளும் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.