மேலும்

Archives

கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை

திருகோணமலை- கன்னியா வெந்நீரூற்றில் தமிழர்களால் பாரம்பரியமாக வழிபாடு செய்யப்பட்டு வந்த பிள்ளையார் கோவிலை இடித்து விட்டு, அந்த இடத்தில் விகாரை கட்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராக நேற்று நடத்தப்படவிருந்த போராட்டம், சிறிலங்கா காவல்துறையினரால் தடுக்கப்பட்டது.

மதம் பிடித்த பிராந்தியங்கள் -5

அமெரிக்க அரசியலில்  செல்வாக்கு மிக்க சிந்தனை குழுக்களில் ஒன்றான The Heritage Foundation என்ற அமைப்பு,  இந்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதியிட்ட , சிறிலங்காவின் அரசியல் நிலைமை குறித்து மிக விபரமான ஒரு அறிக்கையை தயாரித்திருந்தது.

சிறிலங்கா படைகளுடன் பிரித்தானிய இராணுவமும் கூட்டுப் பயிற்சிக்கு ஆயத்தம்

சிறிலங்கா படைகளுடன் இணைந்து பிரித்தானிய இராணுவம் இந்த ஆண்டு கூட்டுப் பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளது. இதுதொடர்பாக, பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா இராணுவத்துடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா?

21/4 தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில், இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார்.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா தூதுவர் சந்திப்பு

அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள றொட்னி பெரேராவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையை நிறுவினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை நியமித்துள்ளார். கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்கள் யாழ்ப்பாணம், மயிலிட்டிப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தியது குறித்து தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பலாலியில் இருந்து விமான சேவை – புறக்கணிக்கப்படும் தமிழக விமான நிலையங்கள்

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் பலாலி விமான நிலையத்தில் இருந்து, முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளில், தமிழ்நாட்டில் உள்ள எந்த விமான நிலையமும் இடம்பெறவில்லை எனத் தெரியவருகிறது.

சீனா வழங்கிய போர்க்கப்பல் சிறிலங்கா வந்தது

சிறிலங்கா கடற்படைக்கு சீனா வழங்கிய போர்க்கப்பல், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

உபாலி தென்னக்கோன் தாக்குதல் – கைரேகையால் மாட்டினார் இராணுவ அதிகாரி லலித் ராஜபக்ச

ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய  முக்கிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளார் என, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.