மேலும்

Archives

10 கட்சிகளுடன் ‘மொட்டு’ கூட்டணி உடன்பாடு – கோத்தா பங்கேற்கவில்லை

பத்து சிறிய அரசியல் கட்சிகளுடன், கூட்டணி அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்று கையெழுத்திட்டுள்ளது.

3 மிக முக்கிய பிரமுகர்களுக்கு 2245 சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு

கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையின் பெரும்பாலான கொமாண்டோக்கள், மிக முக்கிய பிரமுகர்கள் மூவரின் பாதுகாப்புக்கே பயன்படுத்தப்படுவதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

21/4 தாக்குதலுடன் ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை – சிஐடி பணிப்பாளர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்திய உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதிகள், ஐஎஸ்  அமைப்புடன் நேரடியான தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என, குற்ற விசாரணைத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஆகியவற்றின் பணிப்பாளரான ரவி செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

மகிந்தவுடனான சந்திப்பு – அமெரிக்க தூதுவர் மௌனம்

சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

மானிப்பாயில் நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, யாழ். குடாநாட்டில் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

நீர்கொழும்பு தேவாலயம் மீளத் திறப்பு – வரலாற்று சின்னமாக இரத்தக்கறையுடன் அந்தோனியார்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம்- மூன்று மாதங்களுக்குப் பின்னர் நேற்று மீளத் திறக்கப்பட்டது.

கிடுக்கியில் சிக்கிய அமெரிக்கா

2015இல், ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர், இலங்கையில் அமெரிக்காவின் நலன்களை உறுதிப்படுத்துவதில், அந்த நாடு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

மானிப்பாயில் துப்பாக்கிச் சூடு- வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் பலி

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில், வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை  – நிபுணர் குழு

தமிழ்நாட்டில் இருந்து சிறிலங்காவுக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே, மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என்றும், கடலுக்கு அடியிலான இணைப்புகளின் மூலம் அதற்குச் சாத்தியம் இல்லை எனவும், தமிழ்நாட்டின் மின்சக்தி அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மாகோ- ஓமந்தை தொடருந்து பாதையை மீளமைக்கிறது இந்தியா

மாகோ தொடக்கம் ஓமந்தை வரையிலான- வடக்கிற்கான 133 கி.மீ தொடருந்து பாதையை இந்திய உதவியுடன் மீளமைப்புச் செய்வதற்கான உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது.