மேலும்

Archives

மர்மப்பொருள் விழும் நாளில் விமானங்கள் பறக்க, மீன்பிடிக்கத் தடை?

விண்வெளியில் இருந்து WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், வரும் 13ஆம் நாள், வெள்ளிக்கிழமை விழும் என்று எதிர்பார்க்கப்படும், சிறிலங்காவின் தென்பகுதிக் கடலில், மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைதீவு அதிபரைக் கொல்ல முயன்றதாக இலங்கையர் கைது – அதிகாரபூர்வமாக அறிவிப்பு

மாலைதீவு அதிபர் அப்துல்லா யாமீனை படுகொலை செய்ய சதி செய்ததாக,சந்தேகிக்கப்படும் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக, மாலைதீவு அரசாங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நோர்வேயில் குணா. கவியழகனின் ‘விடமேறிய கனவு’ அறிமுக அரங்கு

“நஞ்சுண்டகாடு” குணா கவியழகனின் இரண்டாவது நாவலான ‘விடமேறிய கனவு’ அறிமுக அரங்கு நோர்வே தலைநகர்  ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது.

இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மீது தாக்குதல்

இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், சென்னையில் நேற்றிரவு தமிழ் இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டார்.

சிறிலங்காவில் நோர்வேயின் அமைதி முயற்சிகள் குறித்த நூல் ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது

சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்த நோர்வே மேற்கொண்ட முயற்சிகளை விபரிக்கும், ‘ஒரு உள்நாட்டுப் போரின் முடிவுக்கு – சிறிலங்காவுடனான நோர்வேயின் அமைதி ஈடுபாடு’ (To End a Civil War : Norway’s Peace Engagement with Sri Lanka) என்ற நூல், நேற்று முன்தினம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது.

காணாமற்போனோரைத் தேடும் முயற்சியில் ஒரு நம்பிக்கைக் கீற்று – அமந்த பெரேரா

தனது கணவரைக் கடத்திச் சென்ற நபர்கள் சிறிலங்காப் படையினருடன் தொடர்புபட்டவர்கள் என உத்தரை உறுதிபடத் தெரிவித்தார்.மூன்று பத்தாண்டு கால உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வரும் வேளையிலேயே உத்தரையின் கணவரும் கடத்தப்பட்டார்.

இந்தியக் கடற்படையுடனான கூட்டுப் பயிற்சி – போர்க்கப்பலில் இருந்து பார்வையிட்ட பாதுகாப்புச்செயலர்

திருகோணமலையில் இந்திய – சிறிலங்கா கடற்படைகள் நடத்திய கூட்டுப் போர்ப் பயிற்சி நிறைவு நிகழ்வை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகள், போர்க்கப்பலில் இருந்து பார்வையிட்டனர்.

தாய்லாந்தில் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கை சென்றடைந்தார்.

பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து சமந்தா பவருடன் விஜேதாச ராஜபக்ச பேச்சு

திறந்த அரசுகளின் கூட்டமைப்பில், சிறிலங்கா இணைந்து கொண்டுள்ளமை, இன்னும் கூடுதலான பொறுப்புக்கூறலை நோக்கிய அதன் இன்னொரு அடி என்று தெரிவித்துள்ளார் ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர்.

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா- சிறிலங்கா பேச்சு

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அமெரிக்க உயரதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.