மேலும்

Archives

நேபாளம், வட இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய நிலஅதிர்வு- சிறிலங்காவுக்கு பாதிப்பில்லை

நேபாளத்திலும், வட இந்தியாவிலும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ள நில நடுக்கத்தினால் சிறிலங்காவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திங்கள் இரவு சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் நடந்தது என்ன?

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய 23 மணிநேரப் போராட்டத்தின் போது, நடந்த சம்பவங்களை, சிலோன் ருடே நாளிதழில், பிரசாத் மஞ்சு எழுதியுள்ள கட்டுரையில் சுவையாக விபரித்துள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

புலம்பெயர் தமிழ்க்கல்வி – முயற்சிகளும் சவால்களும்: நோர்வேயில் ஆய்வரங்கு

புலம்பெயர் தமிழ்க் கல்வி தொடர்பான ஆரோக்கியமான கருத்தாடலுக்கான ஆய்வரங்கு ஒன்றினை நோர்வே தமிழ் 3 வானொலி எதிர்வரும் மே 1ஆம் நாள் (வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு ஒஸ்லோவில் ஏற்பாடு செய்துள்ளது.

விக்னேஸ்வரனின் பெயரைக் கெடுக்க முயன்ற இந்திய ஆங்கில நாளிதழ் – உண்மை நிலை

பிரேமானந்தா ஆசிரம வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு இந்தியப் பிரதமரிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுக்கவில்லை என்று வடக்கு மாகாணசபை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐ.நாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் ரொகான் பெரேரா – பான் கீ மூன் சந்திப்பு

நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அம்ரித் ரொகான் பெரேரா, ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கோத்தாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கையில் சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், ஆதரவாளர்களும், சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட சிறிலங்காவின் தேசியக்கொடியை வைத்திருந்தது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவை விட்டு வெளியேறினார் கோத்தா – விசாரணைக்கு 90 நாள் காலஅவகாசம்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்பாக இன்று காலை முன்னிலையாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் அங்கிருந்து வெளியேறினார்.

கோத்தாவிடம் விசாரணை – வெளியே தடையை மீறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்குச் சமூகமளித்துள்ளார். இன்று காலை சுமார் 9.30 மணியளவில் அவர் ஆணைக்குழுவின் பணயகத்துக்கு வருகை தந்தார்.

“நான் இன்னும் ஓய்வுபெறவில்லை” – மீண்டும் வருவேன் என்று சூசகமாக மிரட்டுகிறார் மகிந்த

தாம் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்கவுக்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறைக்குள் அடைக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச – மே 05 வரை விளக்கமறியல்

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, மே 5ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.