மர்மப்பொருள் விண்வெளியில் எரிந்து போனதா?
விண்வெளியில் இருந்து இன்று காலையில் சிறிலங்காவுக்குத் தெற்கேயுள்ள கடற்பகுதியில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட மர்மப்பொருள், இன்னமும் விழவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்வெளியில் இருந்து இன்று காலையில் சிறிலங்காவுக்குத் தெற்கேயுள்ள கடற்பகுதியில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட மர்மப்பொருள், இன்னமும் விழவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை சிறிலங்காவின் தென்பகுதிக் கடலில் விழும் என்ற எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருளைக் கண்காணிக்க ஐரோப்பிய விண்வெளி முகவர் அமைப்பின் விஞ்ஞானிகளும், இலங்கை விஞ்ஞானிகளும், தயார் நிலையில் உள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் வண.மாதுளுவாவே சோபித தேரரின் உடல் ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகள், பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் சற்று முன்னர் தீயுடன் சங்கமமானது.
தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, சிறிலங்காவிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
விண்வெளியில் இருந்து WTF1190F என்ற மர்மப் பொருள், சிறிலங்காவின் தென்பகுதிக் கடலில் நாளை முற்பகல் விழும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்தப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 அரசியல் கைதிகள் இன்று பிற்பகல் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்நாயக்கவும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக டி.எம்.சுவாமிநாதனும் இன்று பதவியேற்றுள்ளனர்.
தனது உடலை தகனம் செய்யாமல், உறுப்புகளை தானம் செய்த பின்னர் புதைக்க வேண்டும் என, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அழைப்பாளர் வண. மாதுளுவாவே சோபித தேரர் விருப்பம் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் காலமான, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய அழைப்பாளர் வண.மாதுளுவாவே சோபித தேரரின் உடல் நேற்றிரவு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.