மேலும்

Archives

வவுனியாவில்  அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில்  நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.

சர்வதேச நீதி கோரி சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

பாகிஸ்தான், அவுஸ்ரேலிய பிரதமர்களுடன் அனுர சந்திப்பு

பாகிஸ்தானும் சிறிலங்காவும், எதிர்வரும் ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றவுள்ளன.

சிறிலங்கா கடற்படையின் 12வது சர்வதேச கடல்சார் மாநாடு ஆரம்பம்

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன், சிறிலங்கா கடற்படை நடத்தும்  காலி கலந்துரையாடல் எனப்படும், 12வது சர்வதேச கடல்சார் மாநாடு நேற்று ஆரம்பமாகியுள்ளது.

ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்கா அதிபர் உரை

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது அமர்வில் நேற்று பிற்பகல் உரையாற்றியுள்ளார்.

ட்ரம்பின் சிறப்புத் தூதுவருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவரும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவரும், வெள்ளை மாளிகையின் அதிபர் பணியாளர் பணியகத்தின் பணிப்பாளருமான செர்ஜியோ கோரை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஜெய்சங்கரை சந்தித்தார் விஜித ஹேரத்- அமெரிக்க உதவி இராஜாங்க செயலருடனும் சந்திப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா  பொதுச்சபையின் 80வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்தித்துப் பேசியுள்ளார்.

மாகாணசபை தேர்தலுக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்- சந்தோஷ் ஜாவிடம் கோரிக்கை

மாகாணசபைகளுக்கான தேர்தலை  உடனடியாக நடத்துவதற்கு  சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

காணிகள் விடுவிப்பு குறித்து வடக்கு ஆளுநரிடம் அமெரிக்க அதிகாரி கேள்வி

அமெரிக்க தூதரகத்தின் தலைமை அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரி, அந்தோனி பிர்நொட் (Anthony Pirnot) வடக்கு மாகாணத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.