சிறிலங்காவுக்கு 10 ட்ரோன்களை வழங்குகிறது ஜப்பான்
சிறிலங்கா கடற்படைக்கு ஜப்பான் சுமார் 500 மில்லியன் யென் மதிப்புள்ள சுமார் 10 கண்காணிப்பு ட்ரோன்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பானிய ஊடகமான ஜிஜி பிரஸ் ( Jiji Press) செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படைக்கு ஜப்பான் சுமார் 500 மில்லியன் யென் மதிப்புள்ள சுமார் 10 கண்காணிப்பு ட்ரோன்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பானிய ஊடகமான ஜிஜி பிரஸ் ( Jiji Press) செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஜப்பானிய நிதி அமைச்சர் கட்டோ கட்சுனோபு (Kato Katsunobu) மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் டி.எம். நகடானி (D.M. Nakatani) ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவின் கடல்சார் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அதிநவீன ஜப்பானிய ட்ரோன்களை வழங்க முடிவு செய்துள்ளது.
மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், பொதுமக்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் மன்னாரில் நேற்று பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
ஐ.நா. பொதுச்சபை அமர்வில் சிறிலங்கா பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக நடந்து கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மன்னாரில் காற்றாலைகளுக்கான உதிரிப்பாகங்களை கொண்டு செல்வதற்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, சிறிலங்கா காவல்துறையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மரண சான்றிதழ்களை ஏற்கத் தயங்குவதாக காணாமல் போனோருக்கான பணியகம் ஜெனிவாவில் ஒப்புக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை திருத்துவதற்கும் நல்லிணக்க வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் சிறிலங்காவுடனான சீனாவின் நட்புறவு ஆழமாக வேரூன்றி செழித்து வருகிறது என்று சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் கீ சென ஹோங் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச்செயலர் அன்டனியோ குடெரெஸ்சை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.