மேலும்

Archives

இந்தியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

பூகோள காலநிலை மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாரிசில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். பூகோள காலநிலை மாநாட்டின் போதே நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்திய இராணுவத் தளபதியை யாழ். வரவிடாமல் தடுத்தது மழை

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் இன்று யாழ்ப்பாணம் செல்லத் திட்டமிட்டிருந்த போதிலும், அந்தப் பயணம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க தீவிரவாத முறியடிப்பு நிபுணர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பணியாற்றும் தீவிரவாத முறியடிப்பு நிபுணர் ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நௌருவில் மரத்தில் ஏறிப்போராட்டம் நடத்திய தமிழ் அகதி சிறையில் அடைப்பு

நௌரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் மரத்தின் மீது ஏறிப் போராட்டம் நடத்தியதால், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோத்தாவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரல் சிக்கினார்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக, அதிபர் ஆணைக்குழு முன்பாக பொய்ச்சாட்சியம் அளித்த, சிறிலங்காவின் முன்னாள் இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர மீது காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா பிரதமருடன் இந்திய இராணுவத் தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், இன்று மாலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் விட்டுக் கொடுக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில், சமரசம் செய்து கொள்ளும் எந்த முடிவையும் எந்தச் சூழ்நிலையிலும் எடுக்கமாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்கா இராணுவத்தை தரமுயர்த்த உதவுவதாக இந்தியத் தளபதி உறுதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர்சிங் சுஹக், இன்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மற்றும், உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு நுழைவிசைவு வழங்க சிறிலங்கா மறுப்பு

நோர்வேயில் வசிக்கும் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு சிறிலங்கா வருவதற்கு, நுழைவிசைவு வழங்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது.

பாரிஸ் பூகோள காலநிலை மாநாட்டில் சிறிலங்கா அதிபர்

பூகோள காலநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா பிரதமர் மைத்திரிபால சிறிசேன நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிசை சென்றடைந்துள்ளார்.