மேலும்

Archives

இடம்பெயர்ந்த மக்களை 6 மாதங்களுக்குள் மீளக்குடியேற்றுவதாக சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் ஆறு மாதங்களுக்குள் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படுவர் என்றும், இதற்கென சிறப்பு செயலணி ஒன்று உருவாக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துக்கான பயிற்சித் தேவைகள் குறித்து ஆராய்ந்தது சீன படை அதிகாரிகள் குழு

சிறிலங்கா இராணுவத்துக்குத் தேவையான பயிற்சிகள் தொடர்பாக ஆராய்வதற்காக, சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவொன்று அண்மையில் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

யாழ். ஆயரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

தேசிய நத்தார் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, யாழ். ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

உலக மாற்றங்களை சிறிலங்கா இராணுவம் ஏற்றுக்கொள்ள வேண்டும்- ரணில்

உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சிறிலங்கா இராணுவம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இரகசியக் கூட்டத்தில் உருவான புதிய அமைப்பு – முதலமைச்சரும் பங்கேற்பு

யாழ்ப்பாணத்தில் நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்றிருந்த இரகசியக் கூட்டம் ஒன்றில், தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா படைகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை

சிறிலங்கா இராணுவத்தை மறுசீரமைப்பது தொடர்பான நிதி மற்றும் நிபுணத்துவ உதவிகளை வழங்க முன்வந்துள்ள பிரித்தானியா, அது தொடர்பாக ஆராய, பிரித்தானிய படை அதிகாரிகள் குழுவொன்றை கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்கள பிரதி உதவிச் செயலரும் சிறிலங்கா வந்துள்ளார்

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தில் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிரதி உதவிச் செயலராகப் பணியாற்றும், கலாநிதி அமி சீரைட் என்ற உயர்மட்ட அதிகாரி சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

மடுவில் கண்ணிவெடி அகற்றினார் மங்கள – ஒட்டாவா உடன்பாட்டில் கையெழுத்திட இணக்கம்

போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார்.

வலுவான சிறிலங்காவைப் பார்க்க விரும்புகிறது அமெரிக்கா – தோமஸ் சானொன்

சிறிலங்காவின் தொடர் முன்னேற்றங்களைக் கொண்டு, தமது உறவுகளை வரும் ஆண்டுகளில் மேலும் விரிவுபடுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராக பிரேரிக்கப்பட்டுள்ள தோமஸ் சானொன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன் தோமஸ் சானொன் சந்தித்துப் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலராக பொறுப்பேற்கவுள்ள தூதுவர் தோமஸ் சானொன் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.