‘இந்தியப் பெருங்கடலின் புதிய முத்து’ – என்கிறார் சம்பிக்க
புதிதாக உருவாக்கப்பட்டு வரும், துறைமுக நகரத்தை இந்தியப் பெருங்கடலின் புதிய முத்து என்று வர்ணித்துள்ளார் சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
புதிதாக உருவாக்கப்பட்டு வரும், துறைமுக நகரத்தை இந்தியப் பெருங்கடலின் புதிய முத்து என்று வர்ணித்துள்ளார் சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
கொழும்பு நகரின் புதிய வரைபடம் நேற்று நிலஅளவைத் திணைக்களத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தை உள்ளடக்கிய, சிறிலங்காவின் புதிய வரைபடம் அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ளது. புதிய வரைபடத்தை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டில் அது வெளியிடப்படும் என்றும் நிலஅளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நான் ஒருபோதும் நாட்டைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கண்டி-கெடம்பே மைதானத்தில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேநாள் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு மீளாய்வு செய்யப்படும் என்றும், அதில் 20 ஹெக்ரெயர் நிலத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவது உள்ளிட்ட பல உட்பிரிவுகள் நீக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தினால், இடைநிறுத்தப்பட்ட 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்ட உடன்பாட்டைப் பாதுகாப்பதற்கு, சீனா தனது இராஜதந்திர முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.