செம்மணி புதைகுழி- சர்வதேச பொறிமுறையை கோருகிறார் விக்னேஸ்வரன்
செம்மணிப் புதைகுழியில் சுமார் 100க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச மேற்பார்வை பொறிமுறையை நாடுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.