சிறிலங்கா கடற்படைக்கு ஜப்பான் வழங்கவுள்ள இரண்டு வகையான ட்ரோன்கள்
சிறிலங்கா கடற்படைக்கு இரண்டு வகையான ட்ரோன்களை ஜப்பான் வழங்கவுள்ளதாக, கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா கடற்படைக்கு இரண்டு வகையான ட்ரோன்களை ஜப்பான் வழங்கவுள்ளதாக, கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா கடற்படைக்கு ஜப்பான் சுமார் 500 மில்லியன் யென் மதிப்புள்ள சுமார் 10 கண்காணிப்பு ட்ரோன்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பானிய ஊடகமான ஜிஜி பிரஸ் ( Jiji Press) செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி உதவி தொடர்பான பல உடன்பாடுகள் இன்று கைச்சாத்திடப்படும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா கடற்படை தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்கு, ஜப்பானிடம் இருந்து 500 மில்லியன் யென் (சுமார் 3.3 மில்லியன் அமெரிக்க டொலர்) கொடையைப் பெறுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தடையை மீறி பறக்கும் விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன எச்சரித்துள்ளார்.
ட்ரோன் உள்ளிட்ட அனைத்து விமானியில்லா விமானங்களும் பறக்கவிடப்படுவதற்கு சிறிலங்காவின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தடைவிதித்துள்ளது.