பிரகீத் கடத்தலுக்கு உத்தரவிட்ட முன்னைய அரசின் மூத்த அதிகாரி – புலனாய்வு அதிகாரிகள் வாக்குமூலம்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவத்துடன், முன்னைய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இருவர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.