மேலும்

Tag Archives: சம்பூர்

புராதன பௌத்த சின்னம் என்ற பெயரில் சம்பூரில் முருகன் ஆலயத்தை ஆக்கிரமிக்க முயற்சி

திருகோணமலை- சம்பூர், சூடைக்குடா பகுதியில் புராதன பௌத்த எச்சங்கள் இருப்பதாக கூறி, முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியை சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களம் விரைவில் சுவீகரிக்கவுள்ளது.

கொழும்பு வந்தார் ஜெய்சங்கர் – பாதுகாப்பு , சம்பூர், திருமலை விவகாரங்களுக்கு முக்கியத்துவம்

சிறிலங்கா அரசாங்கத்துடன் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்றுமாலை கொழும்பு வந்தடைந்தார். கடந்த 11 மாதங்களில் இவர் சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள மூன்றாவது பயணம் இதுவாகும்.

சம்பூரில் விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களுக்கே சொந்தம் – சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சம்பூர் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த  பொதுமக்களின் 818 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கேகே வழங்குமாறு சிறிலங்கா உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளதுடன், சிறிலங்கா முதலீட்டு சபையிடம் இந்த காணிகளை கையேற்றிருந்த கேட்வே இன்டர்ஸ்றீஸ் நிறுவனத்தின் வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது.

சம்பூர் காணிகளில் இருந்து தமிழ்மக்கள் மீண்டும் விரட்டியடிப்பு

சம்பூரில், அண்மையில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட, காணிகளுக்குள் உரிமையாளர்கள் நுழைவதற்குத் தடைவிதித்துள்ள சிறிலங்கா காவல்துறையினர், அங்கு தற்காலிக குடில்களை அமைத்து தங்கியிருந்தவர்களையும், துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களையும், வெளியேற்றியுள்ளனர்.

சம்பூர் மக்களின் காணி உரிமைக்காக மீண்டும் உயர்நீதிமன்றம் செல்கிறது கூட்டமைப்பு

சம்பூரில் பொதுமக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கும் சிறிலங்கா அதிபரின் வர்த்தமானி உத்தரவை இடைநிறுத்தி, சிறிலங்கா உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பான  இடையீட்டு மனுவொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்யவுள்ளது.

சம்பூர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சம்பூரில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கைத்தொழில் வலயத்துக்காக தனியார் காணிகளை, சுவீகரிக்க வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யும் சிறிலங்கா அதிபரின் வர்த்தமானி அறிவிப்புக்கு, சிறிலங்கா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

சம்பூர் சிறிலங்கா கடற்படை பயிற்சி மையம் இடம்மாறுகிறது – 237 ஏக்கர் காணி உரியவரிடம் ஒப்படைப்பு

திருகோணமலை சம்பூரில், பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின் பயிற்சி மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.

சம்பூர் மீள்குடியேற்ற விவகாரம் – நாளை மைத்திரிக்கு அறிக்கை அனுப்புகிறார் ஆளுனர் ஒஸ்ரின்

சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினால், இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாளை அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாணத்தின் ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ.