மேலும்

Tag Archives: கொழும்பு

நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு – கொழும்பு அரசியலில் பரபரப்பு

2015 அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்காக சீன நிறுவனம் ஒன்று 7.6 மில்லியன் டொலர்களை வழங்கியதாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் தேர்தலில் இந்தியாவினால் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் – மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் இந்தியாவினால், பாரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர நிலப்பரப்பை உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தில்

கொழும்பு துறைமுக நகருக்கான நிலப்பகுதியை, கடலில் இருந்து உருவாக்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக, துறைமுக நகரக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது – என்கிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதையோ, அவர் அதிபராவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

ரவிராஜ் கொலை வழக்கு – மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் 2ஆம் நாள் விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் மாதம் 2ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு நகரின் புதிய வரைபடம் வெளியானது

கொழும்பு நகரின் புதிய வரைபடம் நேற்று நிலஅளவைத் திணைக்களத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு 135 மில்லியன் ரூபா மாதாந்த கொடுப்பனவு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள  8,691 உறுப்பினர்களுக்கும், மாதம்தோறும், 135 மில்லியன் ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருவதாக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்குமாறு சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தல்

புதிதாக நியமிக்கப்படும் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியிடம் கூறியுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும்

சிறிலங்கா நாடாளுமன்றம் முடக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

உதயங்கவை சிறிலங்காவுக்கு அனுப்ப மறுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

மிக் போர் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பாக தேடப்படும், ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, நாடு கடத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுத்துள்ளது.