மேலும்

Tag Archives: கடற்படை

சிறிலங்கா கடற்படைப் படகு மோதி மீனவர் பலி – விசாரணை ஆரம்பம்

காரைநகர் கடற்பரப்பில் நேற்றுமுன்தினம் இரவு, மீன்பிடிப் படகு மீது சிறிலங்கா கடற்படைப் படகு மோதி மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் இந்தியப்படை அதிகாரிகளின் உயர்மட்டக் குழு

இந்திய இராணுவ உயர் கட்டளை கற்கைநெறி அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. எயர் கொமடோர் சுரேஸ் ஹொல்லன்னாவர் தலைமையிலான இந்தக் குழுவின் இந்தியாவின் முப்படை அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

அறுகம்குடாவில் பிரித்தானிய ஊடகவியலாளரை முதலை விழுங்கியது

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த  பிரித்தானியாவின் முன்னணி நாளிதழான பிரான்சியல் ரைம்சின், இளம் ஊடகவியலாளரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குச்சவெளியில் நடந்த நீர்க்காகம் போர்ப்பயிற்சி – சிறிலங்கா அதிபர் பங்கேற்கவில்லை

விமானப்படை, கடற்படையினரின் பங்களிப்புடன், சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தும் நீர்க்காகம் போர்ப் பயிற்சி நேற்று திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெற்றது.

அம்பாந்தோட்டைக்கு வந்த சீன குழுவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கடற்படை பலத்த பாதுகாப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சீன குழுவொன்று நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது.

இந்தியத் தூதரகத்தின் புதிய உதவிப் பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

இந்தியத் தூதரக உதவிப் பாதுகாப்பு ஆலோசகராக, லெப்.கேணல் ரவி மிஸ்ரா அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஒத்துழைப்பை பலப்படுத்த அமெரிக்கா முயற்சி

சிறிலங்கா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்துள்ளதாக, அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பானின் நாசகாரி போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் ‘அமகிரி’ என்ற  நாசகாரி போர்க்கப்பல் நேற்று சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வந்துள்ள இந்தக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். 

கடற்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர்

2008ஆம் ஆண்டு கொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க, வெலிசறையில் உள்ள சிறிலங்கா கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

11 தமிழர்கள் கடத்தப்பட்ட சம்பவம் – சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கைது

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெலிசறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.