சிறிலங்கா கடற்படைப் படகு மோதி மீனவர் பலி – விசாரணை ஆரம்பம்
காரைநகர் கடற்பரப்பில் நேற்றுமுன்தினம் இரவு, மீன்பிடிப் படகு மீது சிறிலங்கா கடற்படைப் படகு மோதி மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.






