மேலும்

Tag Archives: விடுதலைப் புலிகள்

வடக்கு மாகாணசபையின் இனப்படுகொலைத் தீர்மானத்தை சிறிலங்கா அரசு நிராகரிப்பு

போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்றும் இதுகுறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வடக்கு மாகாணசபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம், நிராகரித்துள்ளது.

வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கமாட்டேன் – மைத்திரி உறுதிமொழி

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் வடக்கில் இருந்து இராணுவத்தை  விலக்கிக் கொள்ளும் எண்ணம் தமக்குக் கிடையாது என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை மறந்து விடக்கூடாது – என்கிறார் மகிந்த

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

புலிகளால் இன்னமும் ஆபத்து – மகிந்த ராஜபக்ச

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் வலையமைப்புகளால் நாட்டுக்கு இன்னமும் ஆபத்து உள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகிந்தவின் இரகசியங்களை போட்டுடைக்கிறார் சம்பிக்க

2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

போரில் பங்கேற்ற படையினரின் விபரங்களைக் கோரியுள்ளதாம் ஐ.நா – சிறிலங்கா அதிபர் கூறுகிறார்

போரில் பங்கெடுத்த படையினரின் விபரங்களைத் தரக்கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

புலிகளின் புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் நெடியவன் கைது

திருகோணமலை, சாம்பல்தீவில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேல்முறையீடு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மேல்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவீரர் நாளை அனுஸ்டிக்க விடமாட்டோம் – பிரிகேடியர் ருவான் வணிகசூரிய

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கோ, மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கோ, சிறிலங்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய ஆட்சியில் எஞ்சியிருக்கும் புலிகளையும் அழிப்போம் – சூளுரைக்கிறது ஐதேக

சிறிலங்காவில் எதிரணி அமைக்கவுள்ள புதிய ஆட்சியில், அனைத்துலக அளவில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள் என்றும், புலிகளின் கனவு நிறைவேற ஒருபோதும் விடமாட்டோம் என்றும் நாடாளுமன்றத்தில் சூளுரைத்துள்ளார் ஐதேகவின்  பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ.