மேலும்

Tag Archives: திருகோணமலை

நாளை மறுநாள் திருகோணமலையில் மகிந்த அணியின் அரச எதிர்ப்புப் பேரணி

சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நாளை மறுநாள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர்.

சம்பூரில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி திட்டமும் கைவிடப்பட்டது

சம்பூரில் இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்கும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் கைவிட்டுள்ளது. அங்கு 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையமே அமைக்கப்படும் என்று, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ஆட்சிக் கவிழ்ப்புக்கான நடவடிக்கையை திருகோணமலையில் தொடங்குகிறார் மகிந்த

ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டு, கூட்டு எதிரணியைப் பலப்படுத்தும், பரப்புரைகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச திருகோணமலையில் தொடங்கவுள்ளார்.

சிறிலங்கா அரச, பாதுகாப்பு உயர்மட்டங்களுடன் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சகாவுல்லா, சிறிலங்கா அதிபர் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் துறைமுக அபிவிருத்தி குறித்து மகிந்த சமரசிங்கவுடன் இந்தியத் தூதுவர் பேச்சு

சிறிலங்காவின் துறைமுகங்கள், மற்றும் கப்பல் முறையை அபிவிருத்தி செய்வதில் இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பாக கொழும்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

திருகோணமலையில் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் மொகமட் சகாவுல்லா சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, விமான நிலையத்தில் வரவேற்றார்.

போர் முடிந்து 8 ஆண்டுகளுக்கு பின்னரும் சிறிலங்கா திரும்புவதற்குத் தடுமாறும் அகதிகள்

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 100,000 இற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் இந்தியாவின் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் தற்போது வாழ்கின்றனர்.  தாம் தற்போது வாழும் அகதி முகாமானது ஒருபோதும் தமக்கான சொந்த வீடாகாது என்பதை இவர்கள் நன்கறிந்துள்ளனர் .

அமெரிக்க சிறப்புப் படைப்பிரிவினால் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி

அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினால், சிறிலங்கா கடற்படையினருக்கு திருகோணமலையில் வைத்து சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பயிற்சித் திட்டத்தின் கீழ் பலன்ஸ் ஸ்ரைல் 2017/1 என்ற பெயரில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

சம்பூரில் உயிருடன் கரையொதுங்கிய 20 திமிங்கலங்கள்

திருகோணமலை – சம்பூரில் 20 இற்கு மேற்பட்ட திமிங்கலங்கள் நேற்று கரையொதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட மோரா சூறாவளி மற்றும் சிறிலங்காவில் கொட்டிய கடும் மழையைத் தொடர்ந்து, சம்பூர், பழைய இறங்குதுறைப் பகுதியில் 20இற்கும் அதிகமான திமிங்கலங்கள் நேற்று கரையொதுங்கின.

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத்தளம் – இரகசிய உடன்பாடு கையெழுத்தாம்

திருகோணமலை துறைமுகத்தை மையப் பகுதியாகக் கொண்டு அமெரிக்க கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான இரகசிய உடன்பாடு சிறிலங்கா- அமெரிக்க அரசுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், லங்கா சம சமாசக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.