மேலும்

Tag Archives: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

எதிரி பலவீனமடைந்துள்ள போது தான் குரல்வளையைப் பிடிக்க வேண்டும் – சேருவிலவில் யதீந்திரா

ஆட்சி மாற்றத்தால் தெற்கு பலவீனமடைந்திருக்கிறது. எங்களுடைய எதிரி பலவீனமடைந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் அவன் குரல்வளையை நாங்கள் பிடிப்பதற்கான தருணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட இளம் வேட்பாளரும் அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும் அதிகாரப்பகிர்வுக்கு இடமில்லை – என்கிறார் மகிந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், கூட்டமைப்பு அதிகாரப்பகிர்வைக் கோரினாலும், நாட்டைப் பிரிக்க ஐக்கிய மக்கள் கூந்திர முன்னணி இடமளிக்காது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையின் உள்ளடக்கம் என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடவுள்ள தேர்தல் அறிக்கையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு, படைவிலக்கம் உள்ளிட்ட போருக்குப் பிந்திய மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கான தீர்வு, பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனிடம் தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் மூதூர் முஸ்லிம்கள்

கிழக்கில், மட்டுமன்றி வட-கிழக்கிலும் கூட முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

போட்டியில் இருந்து விலகினார் அனந்தி

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.

கூட்டமைப்புடன் மைத்திரி அவசர சந்திப்பு – அரசியல்தீர்வு குறித்து தொடர்ந்து பேச இணக்கம்

இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சு நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க முடியாது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

தேர்தல்முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்தச்சட்ட யோசனை, சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதனை ஒருபோதும், ஆதரிக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  

நாடாளுமன்றக் கலைப்புக்கு கூட்டமைப்பு ஆதரவு

வடக்கு,கிழக்கு தமிழர் பிரச்சினைகளை கையாளக்கூடிய புதிய நாடாளுமன்றம் உருவாக வழிவகுக்கும் வகையில், தற்போதைய நாடாளுமன்றத்தை கலைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விக்னேஸ்வரனின் கோரிக்கை – ரணிலுக்கு அறிவுரை கூறிய அஸ்கிரிய பீடாதிபதி

வடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவம் விலக்கப்பட வேண்டும் என்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர், இத்தகைய கோரிக்கைகள் விடயத்தில் அரசாங்கம் விவேகத்துடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மாத்தறை இராணுவ அணிவகுப்பை புறக்கணிக்கிறது கூட்டமைப்பு

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்ததை நினைவு கூரும் வகையில், மாத்தறையில் வரும் 19ம் நாள் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள, இராணுவ அணிவகுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.