மேலும்

Tag Archives: கடற்படை

சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்கா கடற்படைக்கு கப்பல் ஒன்றை வழங்குவதற்கு ஜப்பானிய  அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா, இதனைத் தெரிவித்துள்ளார் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் பெயரைக் கெடுக்க அரசாங்கம் முயற்சியா? – மகிந்தவின் குற்றச்சாட்டை மறுக்கும் ருவான்

சிறிலங்கா கடற்படையின் பெயரைக் கெடுப்பதற்காகவே, அம்பாந்தோட்டை துறைமுகப் பணியாளர்களின் போராட்டத்தை குழப்புவதற்கு, கடற்படையை அரசாங்கம் அனுப்பியதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டை, சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சிறிலங்கா கடற்படைக்கு கோவாவில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது

சிறிலங்கா கடற்படைக்காக கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.

அம்பாந்தோட்டை சம்பவம் – சிறிலங்கா கடற்படையின் அறிக்கை பாதுகாப்புச் செயலரிடம் கையளிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கடந்த சனிக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

சிறிலங்கா கடற்படைத் தளபதி மீதான குற்றச்சாட்டு – பாதுகாப்பு அமைச்சு விசாரணை

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் ஒருவரை சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தாக்கினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு எதிராக ஊடகவியலாளர் முறைப்பாடு

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படைத் தளபதி தம்மைத் தாக்கினார் என்று, ஊடகவியலாளர் திலீப் ரொசான், சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் பணயம் வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய கப்பல் கடற்படையினரால் விடுவிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தம் செய்யும் தற்காலிகப் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த, ஜப்பானிய கப்பல், நேற்று மாலை சிறிலங்கா கடற்படையினரால் விடுவிக்கப்பட்டு, ஆழ்கடலுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

அம்பாந்தோட்டையில் 7000 கார்களுடன் ஜப்பானிய கப்பல் பணயம் – சிறிலங்காவுக்கு கடும் நெருக்கடி

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களால், பாரிய ஜப்பானிய கொள்கலன் கப்பல் ஒன்று பணயமாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளுடன் அமெரிக்க பசுபிக் கட்டளை தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ், நேற்று சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு மாநாடு – திங்களன்று ஆரம்பம்

சிறிலங்கா கடற்படை ஆண்டுதோறும் நடத்தும் அனைத்துலக கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கான, ‘காலி கலந்துரையாடல்-2016’ , வரும் 28ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது.